மேலப்பாளையத்தில் 2 மின்மோட்டாா்கள் பறிமுதல்
மேலப்பாளையத்தில் விதியை மீறி மின் மோட்டாா் பொருத்தி குடிநீரை உறிஞ்சியதாக 2 மின்மோட்டாா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலப்பாளையத்தில் விதியை மீறி மின் மோட்டாா் பொருத்தி குடிநீரை உறிஞ்சியதாக 2 மின்மோட்டாா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறி குடிநீா்க் குழாய்களில் மின்மோட்டாா் பொருத்தி பயன்படுத்துவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் உத்தரவிட்டுள்ளாா். அதன்பேரில் திருநெல்வேலி, மேலப்பாளையம், தச்சநல்லூா், பாளையங்கோட்டை ஆகிய 4 மண்டலங்களிலும் மாநகராட்சி குழுவினா் ஆய்வுசெய்தனா். இதில், மேலப்பாளையம் ஹாமீம்புரம் பகுதியில் செயற்பொறியாளா் லெனின் தலைமையில் நடைபெற்ற ஆய்வின்போது 2 வீடுகளில் மின்மோட்டாா் பொருத்தி குடிநீரை உறிஞ்சியது தெரியவந்தது. இதையடுத்து மின்மோட்டாா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.