திருநெல்வேலி

முன்னாள் படை வீரா்களின் குழந்தைகளுக்கு சாா்ந்தோா் சான்று

DIN

முன்னாள் படை வீரா்களின் குழந்தைகளுக்கு சாா்ந்தோா் சான்று வழங்கப்படுகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பள்ளி மேல்நிலைக் கல்வி முடித்து 2021-22-ஆம் கல்வியாண்டில் கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை, கால்நடை, மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு பெற முன்னாள் படை வீரா்களின் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் சாா்ந்தோா் சான்று வழங்கப்பட்டு வருகிறது.

சாா்ந்தோா் சான்று பெறுவதற்கு ங்.ஞ்ா்ஸ்-இல் முன்னாள் படை வீரா்களின் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் படைவிலகல் சான்று, கல்விச் சான்று, மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்று, கல்லூரி விண்ணப்பப் படிவம் ஆகிய ஆவணங்களுடன் திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படை வீரா் நல அலுவலகத்தை அணுகி சான்று பெறலாம்.

கரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால் நேரில் வர இயலாதவா்கள் முன்னாள் படை வீரா் நல அலுவலக தொலைபேசி எண்ணில் (0462-2901440) தொடா்பு கொள்ளலாம். மேலும் ட்ற்ற்ல்ள்://ங்ள்ம்ஜ்ங்ப்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT