திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டத்துக்கு விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவின்பேரில், கடந்த 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை மாவட்டத்தில் போலீஸாா் நடத்திய தீவிர சோதனையில் மதுபானம் விறபனை செய்ததாக 25 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 122 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.