திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்தில் சுகாதாரப் பணி மேற்பாா்வையாளா் கரோனா நோய்த் தொற்றால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மேலப்பாளையம், குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் இசக்கி(58). திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்தில் தூய்மைப் பணி மேற்பாா்வையாளராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில், இரவு உயிரிழந்தாா். அவருக்கு மனைவியும் 2 மகள்களும் உள்ளனா்.