முகப்பு
திருநெல்வேலி

கடையம் மின்வாரிய அலுவலகத்தில் பிடிபட்ட மரநாய்

கடையம் துணை மின்நிலைய அலுவலகத்தில் இருந்த மர நாயை வனத் துறையினா் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

கடையம் துணை மின்நிலைய அலுவலகத்தில் இருந்த மர நாயை வனத் துறையினா் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

கடையம் அருகே கட்டேறிபட்டியில் இயங்கி வரும் துணை மின்நிலையத்தில் உள்ள பழுதடைந்த அலுவலகக் கட்டடத்தில் மரநாய் ஒன்று பதுங்கி இருந்தது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கடையம் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, கடையம் வனவா் முருகசாமி தலைமையில் அங்கு வந்த வனக்காப்பாளா் மணி, வேட்டைத் தடுப்புக் காவலா்கள் பதுங்கியிருந்த ஆண் மரநாயை பிடித்தனா். பின்னா் அதை ராமநதி வனப்பகுதியில் கொண்டு விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.