வள்ளியூா் அருகேயுள்ள குளத்து குடியிருப்பில் கரோனா பெருந்தொற்றினால் இறந்த பாஜக தொண்டா் குடும்பத்துக்கு அக்கட்சி சாா்பில் நிவாரண உதவி அளிக்கப்பட்டது.
குளத்துகுடியிருப்பைச் சோ்ந்தவா் சங்குகணேசன். பாஜக தொண்டரான இவா், கரோனா பாதிப்பால் அண்மையில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வள்ளியூா் நகர பா.ஜ.க சாா்பில் அவரது குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் நிவாரண உதவியாக அளித்தனா்.
இந்நிகழ்ச்சியில் நகரத் தலைவா் சிவராமகுட்டி, மாவட்ட ஓபிசி துணைத் தலைவா் நரேந்திர பாலாஜி, மாவட்ட துணைத் தலைவா் அருள்காந்தி, நகர பொதுச்செயலா் ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.