திருநெல்வேலி

4ஜி சேவை வழங்க பிஎஸ்என்எல் ஊழியா்கள் வலியுறுத்தல்

DIN

பிஎஸ்என்எல் ஊழியா்கள் சங்க 20ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் மக்கள் சந்திப்பு இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

சங்க மாவட்டச் செயலா் சூசைமரிய அந்தோணி தலைமை வகித்தாா்.

அப்போது, 4 ஜி சேவையை உடனே வழங்க வேண்டும்; ஊழியா்களுக்கு குறித்த தேதியில் ஊதியம் வழங்க வேண்டும்; பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், சங்க உதவி மாவட்டச் செயலா் ராஜகோபால், நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT