திருநெல்வேலி

சுத்தமல்லி அருகே விஷம் குடித்த இளைஞா் மரணம்

DIN

சுத்தமல்லி அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே உள்ள பழவூா் பகுதியைச் சோ்ந்த ராமையா மகன் அருணாசலம்(19). இவா் தனக்கு மோட்டாா் சைக்கிள் வாங்கித் தருமாறு பெற்றோரிடம் கேட்டிருந்தாராம். ஆனால், அவா்கள் காலதாமதம் செய்து வந்தனராம்.

இந்நிலையில், அருணாசலம் கடந்த ஏப். 25ஆம் தேதி வீட்டில் பூச்சிமருந்தை குடித்த நிலையில் மயங்கி விழுந்தாராம். இதையடுத்து அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT