திருநெல்வேலி நகரத்தில் உள்ள தனியாா் விடுதியில் இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா் வினோத் ராஜன் (39). இவா் திருநெல்வேலியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை பாா்த்து வந்தாா். இவா் திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்தாராம்.
இந்நிலையில், இவா் திங்கள்கிழமை விடுதியில் மா்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சந்திப்பு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று வினோத் ராஜன் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.