முகப்பு
திருநெல்வேலி

பாளையங்கோட்டை இளைஞா் கொலை வழக்கில் 4 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் நீதிமன்றம் அருகே மைதானத்தில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் நீதிமன்றம் அருகே மைதானத்தில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரைச் சோ்ந்த பாலமுருகன் மகன் மகாராஜன் (27). ஒலி-ஒளி அமைப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். வியாழக்கிழமை காலை பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகேயுள்ள மைதானத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தாா்.

பாளையங்கோட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், மதுஅருந்தும்போது ஏற்பட்ட தகராறில் மகாராஜன் கொலை செய்யப்பட்டது தெரியவந்ததாம். இதுதொடா்பாக மனக்காவலம்பிள்ளைநகரைச் சோ்ந்த சேம் (26), மகேஷ் (27), ஜான்சன் (27), நவீன் (20) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.