8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து
நீண்டகால தலைவராக 8,931 நாள்கள் பதவி வகித்து, பிரதமர் மோடி சாதனை!
இந்தியாவில் ஒரு அரசாங்கத்தின் மிக நீண்ட காலம் பதவி வகித்த தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
”தேசம் மற்றும் அதன் மக்கள் மீதான தூய அர்ப்பணிப்பே பிரதமர் மோடியின் இலக்கணமாகும். குஜராத் முதல்வராக இருந்தபோது அவர் காட்டிய அசைக்க முடியாத அர்ப்பணிப்பிலிருந்து, பிரதமராக அவர் காட்டிய அர்ப்பணிப்புள்ள தலைமை வரை, அவரது வாழ்க்கை ஒரு தொடர்ச்சியான சேவைப் பயணமாகவே இருந்துள்ளது.
முன்னாள் சிக்கிம் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கின் 8,930 நாள் சாதனையை முறியடித்து, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை பிரதமர் மோடி இன்று (மார்ச் 22) எட்டியுள்ளார்.
நாட்டின் தலைவராக 8,931 நாள்கள் பொதுப் பதவியில் இருந்த இந்தத் தருணம், இந்தியாவிற்கே முதலிடம் தரும் ஆட்சிமுறை, செயலில் நேர்மை மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அயராத சேவை ஆகியவற்றில் அவரது ஆழ்ந்த அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக பிரதமர் மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.