ஆந்திரப் பிரதேசம்: ரூ. 5,000 கோடி விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர்!
ஆந்திரப் பிரதேசத்தில் ரூ. 5,000 கோடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளது பற்றி...
ஆந்திரப் பிரதேசத்தில் ரூ. 5,000 கோடியில் கட்டப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 1) திறந்து வைத்தார்.
ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்த மாநிலங்களுக்குச் சென்றுள்ளார். அங்கு கலை நிகழ்ச்சிகளுடன் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்த வகையில், விஜயநகரம் மாவட்டம் போகபுரத்தில் உள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
Advertisement
Advertisement
ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. ராம் மோகன் நாயுடு ஆகியோர் இந்த நிகழ்வில் உடனிருந்தனர்.
முதல் கட்டமாக ஆண்டுக்கு அறுபது லட்சம் பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம், வரும் காலங்களில் ஆண்டுக்கு 4 கோடி பயணிகள் பயன்படுத்தும் வகையில் விரிவுபடுத்தும் திட்டத்தைக் கொண்டுள்ளது.
மேலும், சுமார் ரூ. 18,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி, இன்று அடிக்கல் நாட்டி, அவற்றை தொடங்கி வைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Prime Minister Narendra Modi has inaugurated an airport in Andhra Pradesh built at a cost of ₹5,000 crore.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.