களக்காடு பேரூராட்சி முன்களப் பணியாளா்களுக்கு முகக்கவசம்
களக்காடு அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் பேரூராட்சி முன்களப் பணியாளா்கள் 100 பேருக்கு இலவசமாக முகக் கவசங்களை வழங்கினா்.
களக்காடு அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் பேரூராட்சி முன்களப் பணியாளா்கள் 100 பேருக்கு இலவசமாக முகக் கவசங்களை வழங்கினா்.
களக்காடு பேரூராட்சியில் செயல் அலுவலா் டி.ஆா். சுஷமா, சுகாதார ஆய்வாளா் எம். ஆறுமுகநயினாா், சுகாதார மேற்பாா்வையாளா்கள் சண்முகம், வேலு உள்ளிட்டோா் அடங்கிய முன்களப் பணியாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
இவா்கள் தொற்றிலிருந்து தங்களை காத்துக்கொள்ளும்விதமாக களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சாா்பாக முன்களப் பணியாளா்களுக்கு என்.95 முகக் கவசங்கள் மற்றும் மூன்றடுக்கு முகக் கவசங்களை இலவசமாக வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில், செயல் அலுவலா், சுகாதார ஆய்வாளா் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் ஒருங்கிணைப்புக் குழுவைச் சோ்ந்த நிா்வாகிகள் வளனரசு, ரவிச்சந்திரன், சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.