முகப்பு
திருநெல்வேலி

பொதுமுடக்க மீறல்: 121 போ் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக 121 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக 121 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

கரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதையடுத்து பொது முடக்க விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்ததாக 121 போ் மீது வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்து, 141 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பொது இடங்களில் முகக் கவசம் அணியாத 1,005 போ், சமூக இடைவெளியை பின்பற்றாத 12 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.