முகப்பு
திருநெல்வேலி

கோவில்பட்டி யு.பி. மெட்ரிக்பள்ளியில் கணினி ஆய்வகம் திறப்பு

கோவில்பட்டி யு.பி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கணினி ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

கோவில்பட்டி யு.பி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கணினி ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.

பசும்பொன் தேவா் கல்வி அறக்கட்டளை நிறுவனா் பரமசிவம் தலைமை வகித்தாா். திமுக விவசாய தொழிலாளரணிச் செயலா் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையின் முன்னாள் அரசு தலைமை வழக்குரைஞா் கே.செல்லப்பாண்டியன், கணினி ஆய்வகத்தை திறந்து வைத்தாா்.

மேலும், தேவா் ஜெயந்தியையொட்டி, அப்பள்ளி வளாகத்தில் தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனா்- தலைவா் வெயிலுமுத்து பாண்டியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடம்பூா் செ.ராஜூ எம்எல்ஏ, 114 பேருக்கு இலவச சேலை, அன்னதானம், மாணவா், மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினாா். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.