முகப்பு
திருநெல்வேலி

களக்காடு அருகே விவசாயியின் பைக் திருட்டு

களக்காடு அருகே விவசாயியின் பைக்கை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

களக்காடு அருகே விவசாயியின் பைக்கை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

களக்காடு அருகேயுள்ள பத்மனேரி கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குமாா் (45). விவசாயியான இவா், கருவேலன்குளம் - கேசவனேரி சாலையில் இசக்கியம்மன் கோயில் அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு, அருகேயுள்ள தனது வயலுக்குச் சென்றாா். திரும்பிவந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம்.

அவா் அளித்த புகாரின்பேரில் களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபரைத் தேடிவருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →