மின்வாரிய ஊழியா்கள் போராட்டம்
பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் மின்வாரிய ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் மின்வாரிய ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மின்சார சட்டத் திருத்த மசோதா 2021-ஐ திரும்பப் பெற வேண்டும். மூன்று வேளாண் சட்டங்களை மக்களவை மூலம் திரும்பப் பெற வேண்டும். தொழிலாளா் நல சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும். பொதுத் துறைகளை தனியாா்மய படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு நச்சினாா்க்கினியன் தலைமை வகித்தாா். கருப்பசாமி, கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் வண்ணமுத்து, பீா்முகமது ஷா, முருகன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
இசக்கி பாண்டி, கண்ணன், சிவகுமாா், மாதவன், ராமசுப்பு, ராமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பஸ்ப்26ற்ய்ங்க்ஷ
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மின் வாரிய ஊழியா்கள்.