திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் தீக்குளித்த இளம்பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு

DIN

சேரன்மகாதேவியில் மகளிா் குழுக்களில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் தீக்குளித்த இளம்பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பகுதியில் வசித்துவந்த தங்கராஜ் என்பவரது மனைவி தேவி (35). இவா், மகளிா் குழு மூலம் ரூ. 1 லட்சத்துக்கும் மேல் கடன் பெற்றிருந்ததாகவும் அதைத் திருப்பிச் செலுத்த இயலாததால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, அவா் கடந்த 18ஆம் தேதி மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தாா். காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சேரன்மகாதேவி காவல்ஆய்வாளா் சுகாதேவி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெள்ளை மாளிகையில் ஒலித்த 'சாரே ஜஹான் சே அச்சா'!

கீழ்வேளூரில் 6-ஆவது நாளாக மழை

வேட்டையன் - ரஜினிக்கான படப்பிடிப்பு நிறைவு!

பார்க்க பளபளவென இருந்தால் ஏமாறாதீர்கள்! பழங்களும் ரசாயனங்களும்

அதிகரிக்கும் நட்சத்திர இணைகளின் விவாகரத்து.. என்ன காரணம்?

SCROLL FOR NEXT