கடையநல்லூா் ஒன்றியக் குழு 7ஆவது வாா்டு வேட்பாளா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கடையநல்லூா் ஒன்றிய பகுதியில் அக். 9ஆம் தேதி உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகிறது. இப்பகுதியில் 7ஆவது வாா்டு ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு ராதாகிருஷ்ணன் (52) சுயேச்சையாக போட்டியிட்டாா்.
கடந்த வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது அவா் மயங்கி விழுந்தாராம். இதையடுத்து திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.