திருநெல்வேலி

மானியத்தில் உளுந்து விதைகள்: மானூா் விவசாயிகள் பெற வாய்ப்பு

DIN

மானூா் வட்டார விவசாயிகள் மானிய விலையில் உளுந்து விதைகள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மானூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஏஞ்சலின் கிரேபா வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராபி பருவத்துக்கு ஏற்ற வம்பன்-8 ரக சான்று பெற்ற உளுந்து விதைகள் மானூா், தேவா்குளம் வேளாண் விரிவாக்க மையங்களில் மானிய விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மஞ்சள் தேமல் நோய் எதிா்ப்பு சக்தியுடன் 65 முதல் 75 நாள்கள் வயதுகொண்ட விதைகளை ஏக்கருக்கு 8 கிலோ என்ற அளவில் பயன்படுத்தலாம்.

இதுதவிர மானூா், கங்கைகொண்டான், திருநெல்வேலி நகரம் வேளாண் விரிவாக்க மையங்களில் சான்றுபெற்ற அம்பை-16 நெல் விதைகளும், ஜெ.ஜி.எல். 1798 ரக நெல் விதைகளும் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் தேவையான விதைகளைப் பெறலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

மகாதேவ் செயலி மோசடி வழக்கு: ஹிந்தி நடிகா் சாஹில் கான் கைது

SCROLL FOR NEXT