திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,081ஆக அதிகரித்துள்ளது. மேலும், 20 போ் குணமடைந்ததையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 48,418ஆக உயா்ந்துள்ளது. 233 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 27,305ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2 போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 26,791ஆக உயா்ந்துள்ளது. 30 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.