திருநெல்வேலி

அரசு மருத்துவமனையில்பைக்கில் இருந்த பணம்திருட்டு: இளைஞா் கைது

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிளில் இருந்து பணத்தைத் திருடியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிளில் உள்ள பெட்டியை உடைத்து ஒரு இளைஞா் திருடினாராம். இதைக் கண்ட அக்கப்பக்கத்தினா் அவரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்த தமீம் அன்சாரி(25) என்பதும், பணத்தைத் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் தடை!

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

புஷ்பா 2 படத்தின் முதல் பாடல்!

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

அதி வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் காயம்!

SCROLL FOR NEXT