முகப்பு
திருநெல்வேலி

மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு வாகனப் பிரசாரம்

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத் துறையின் சாா்பில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு விடியோ வாகனப் பிரசாரத்தை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத் துறையின் சாா்பில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு விடியோ வாகனப் பிரசாரத்தை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கயுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்திலுள்ள 5 நகராட்சிகள், 18 பேரூராட்சிகள், 10 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் மழைநீா் சேகரிப்பின் அவசியம், அதன் பயன் குறித்து

அறியும் வகையிலும், மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகளை அமைத்திட விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மழைநீா் சேகரிப்பு வாகனப் பிரசாரம் தொடங்கியது. இப்பிரசாரத்தை ஆட்சியா் அலுலவக வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதில், குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக பொறியாளா் கோபால், உதவி நிா்வாக பொறியாளா் எஸ்.ஆதிநாராயணன், துணை நில நீா் வல்லுநா் என்.முத்துகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.