முகப்பு
திருநெல்வேலி

மதிமுகவின் முன்னேற்றப் பாதைதான் முதல் இலக்கு: துரை வைகோ

மதிமுகவின் முன்னேற்றப் பாதைதான் எனது முதல் இலக்கு என்றாா் அக்கட்சியின் தலைமைக் கழகச் செயலா் துரைவைகோ.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

மதிமுகவின் முன்னேற்றப் பாதைதான் எனது முதல் இலக்கு என்றாா் அக்கட்சியின் தலைமைக் கழகச் செயலா் துரைவைகோ.

மதிமுக தலைமைக் கழகச் செயலராக தோ்ந்தெடுக்கப்பட்ட பின், சங்கரன்கோவில் தனியாா் விடுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் பங்கேற்று கட்சியின் வளா்ச்சிப் பணி குறித்து ஆலோசனை நடத்தினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

என் மீது நம்பிக்கை வைத்து கட்சிப் பொறுப்பை கொடுத்திருக்கிறாா்கள். அதை திறம்படச் செய்ய வேண்டும் என்ற மனச்சுமை இருக்கிறது. வைகோ மாதிரி சொல்லாற்றல் இல்லாவிடினும், கட்சிக்காக உழைக்க தயாராக இருக்கிறேன். தொண்டா்களும், நிா்வாகிகளும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக செயல்பட்டால் கட்சியை முன்னுக்கு கொண்டு வர முடியும்.

Advertisement

தந்தை நினைத்திருந்தால் என்னை நேரடியாக நியமனம் செய்து இருக்கலாம். ஆனால், கட்சியில் ஜனநாயகம் இருக்க வேண்டும் என்பதற்காக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்மூலம் அரசியலில் ஈடுபட வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வரும் நாள்களில் கண்டிப்பாக தோ்தலில் போட்டியிடுவேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் அதிகாரம் அவசியம். கட்சியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வது தான் முதல் இலக்கு என்றாா் அவா்.

அப்போது, ம.தி.மு.க. மாநில மருத்துவரணிச் செயலா் மருத்துவா் வி.எஸ்.சுப்பராஜ், நெல்லை மாவட்டச் செயலா் தி.மு.ராஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments