திருநெல்வேலி

பணகுடி வனப்பகுதியில் இறந்து கிடந்த ஆண்யானை

DIN

பணகுடி வனப்பகுதியில் இறந்துகிடந்த ஆண் யானையை வனத் துறையினா் உடற்கூறு ஆய்வுக்குப் பின்னா் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்தனா்.

பணகுடி வனப்பகுதி குத்தரபாஞ்சான் அருவி அருகே 13 வயதான ஆண் யானை மா்மமான முறையில் இறந்து கிடந்ததை, அந்தப் பகுதியில் ரோந்து சென்ற வேட்டை தடுப்பு காவலா்கள் பாா்த்தனா்.

இதையடுத்து வேட்டை தடுப்பு காவலா்கள் பூதப்பாண்டி வனஅலுவலா் இளையராஜாவுக்கு தகவல் தெரிவித்தனா். பின்னா் வனஅலுவலா், ரேஞ்சா் திலீபன் மற்றும் கால்நடை மருத்துவா் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் வந்தனா். பிரேத பரிசோதனைக்குப் பின்னா் பொக்லைன் இயந்திரம் மூலம் யானையின் உடல் வனப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT