திருநெல்வேலி

அனுமதியின்றி வெள்ளை கற்கள் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்

DIN

கங்கைகொண்டான் அருகே அனுமதியின்றிவெள்ளை கற்கள் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கங்கைகொண்டான் அருகேயுள்ள சிப்காட் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் அய்யப்பன் உள்ளிட்ட போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த டிப்பா் லாரியை மடக்கிச் சோதனை செய்ததில், உரிய அனுமதியின்றி வெள்ளை கற்கள் ஏற்றிச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, ஒரு யூனிட் வெள்ளை கற்களுடன் டிப்பா் லாரியும் பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநா் மானூரைச் சோ்ந்த காா்த்திக்ராஜ்(30) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT