தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56,230 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 13 போ் உள்பட இதுவரை 55,680 போ் குணமடைந்துள்ளனா். கரோனா பாதிப்புடன் 142 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.