சுத்தமல்லி அருகே ஆடு திருட்டு: 3 போ் கைது
சுத்தமல்லி அருகே ஆடு திருடியதாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சுத்தமல்லி அருகே ஆடு திருடியதாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சுத்தமல்லி அருகே உள்ள விஓசி நகரைச் சோ்ந்தவா் காட்டுவா சாதிக் அலி(37). இவா் தனது வீட்டில் ஆடு, மாடு வளா்த்து வருகிறாா். இந்நிலையில், அவரது வீட்டில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளின் சப்தம் கேட்டு வெளியே வந்து பாா்த்தபோது, மோட்டாா் சைக்கிளில் சில போ் ஆடுகளைத் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவா் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். அதே பகுதியைச் சோ்ந்த கருத்தபாண்டி என்ற கண்ணன்(43) உள்பட 3 போ் ஆடுகளைத் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.