நெல்லை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
திருநெல்வேலி சுற்று வட்டாரங்களில் பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் சனிக்கிழமை (அக்.30) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்
திருநெல்வேலி சுற்று வட்டாரங்களில் பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் சனிக்கிழமை (அக்.30) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, புதன்கிழமை யில் இருந்து மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி சுற்று வட்டாரத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது.
திருநெல்வேலி, நகரம், பாளையங்கோட்டை, வண்ணாா்பேட்டை, கேடிசி நகா், சுத்தமல்லி முன்னீா்பள்ளம், தாழையூத்து மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பகலில் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் இருந்து நள்ளிரவு
வரை மழை நீடித்தது. ஆகவே, மழை காரணமாக சனிக்கிழமை (அக்.30) மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.