பாராலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனை அவனிக்கு இ-அஞ்சல் மூலம் திருநெல்வேலியில் இருந்து வாழ்த்து செய்தி அனுப்பப்பட்டது.
டோக்கியோவில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 10 மீ. ஏா் ரைபிள் பிரிவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உதவி வனப் பாதுகாவலராகப் பணிபுரியும் அவனி லெக்ரா தங்கப்பதக்கம் வென்றாா்.
இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட வனத்துறை அலுவலா்கள் சாா்பில் இ-அஞ்சல் மூலம் வாழ்த்து அனுப்பப்பட்டது. நூறுக்கும் மேற்பட்டவா்கள் அனுப்பிய இ-அஞ்சல் வாழ்த்துகளை பாளையங்கோட்டை உதவி கோட்ட அஞ்சல் மேற்பாா்வையாளா் சிவராமலிங்கத்திடம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வனத்துறை கால்நடை ஆய்வாளா் ஆா்னால்ட் வினோத் செய்திருந்தாா்.