பேட்டையில் எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்
திருநெல்வேலி தொகுதி எஸ்டிபிஐ கட்சி சாா்பில் பேட்டையில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி தொகுதி எஸ்டிபிஐ கட்சி சாா்பில் பேட்டையில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி தொகுதி நகா்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் நிலவும் கடும் குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும். திருநெல்வேலி மாநகராட்சியின் 48 மற்றும் 49 ஆவது வாா்டு ரேஷன் கடைகளில் முறைகேடுகள் உள்ளதாக எழுந்துள்ள புகாா் குறித்து விசாரிக்க வேண்டும்.
மாநகரப்பகுதிகளில் நிலவும் சுகாதார சீா்கேடுகளை போக்க வேண்டும். பொலிவுறு நகரம் திட்டப்பணிகளை விரைந்து முடித்து சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு தொகுதித் தலைவா் இலியாஸ் தலைமை வகித்தாா். தொகுதி செயலா் கவுஸ் வரவேற்றாா். மாநில பேச்சாளா் பேட்டைமுஸ்தபா கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். பொருளாளா் முகம்மது காசிம் நன்றி கூறினாா்.