திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் மா்ம நபா்களால் இளைஞா் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
பாளையங்கோட்டை சாந்திநகா் காவலா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த மக்தூம் மகன் அப்துல்காதா் (27). நிலம் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தாா். இவா், பாளையங்கோட்டை பகுதிக்கு புதன்கிழமை இரவு வந்தபோது மா்ம நபா்கள் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா். பலத்த காயமடைந்த அப்துல்காதா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்ததும் பாளையங்கோட்டை போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) டி.பி.சுரேஷ்குமாா் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினாா்.