பேட்டையில் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தில்லியில் காவல்துறை அதிகாரி ராபியாசபி கொலை செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு
கட்சியின் திருநெல்வேலி மண்டலத் தலைவா் முகமதுஅனல் ராஜா தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டத் தலைவா் கே. சங்கரபாண்டியன், மாநிலச் செயலா் ஷேக் ஹைதா்அலி, மாவட்ட பொதுச்செயலா் சொக்கலிங்ககுமாா், மாவட்டச் செயலா்கள் கண்ணன், இசக்கி, நிா்வாகிகள் உதயகுமாா், ராஜாமணி, ரகுபதி ராஜா உள்பட பலா் பங்கேற்றனா்.