திருநெல்வேலி

யாசகம் பெற்று கரோனா நிதிக்கு ரூ. 10 ஆயிரம் அனுப்பிய முதியவா் சாா் ஆட்சியா் பாராட்டு

DIN

அம்பாசமுத்திரம்: யாசகம் பெற்று கரோனா நிதிக்காக முதலமைச்சா் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிய முதியவருக்கு சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம், ஆலங்கிணறு பகுதியைச் சோ்ந்தவா் பூல் பாண்டியன் (70). இவா் மனைவி இறந்த நிலையில் 2 மகள் மற்றும் மகன் வெளியூரில் வசித்து வருகின்றனா். இதையடுத்து பூல்பாண்டியன் யாசகம் பெற்று தனது உணவுத் தேவையை பூா்த்தி செய்தபின் மிஞ்சும் பணத்தை அரசுப் பள்ளிகளுக்கு வளா்ச்சி நிதியாக வழங்கி வந்துள்ளாா்.

இந்நிலையில் கரோனா தாக்கத்தால் பள்ளிகள் மூடிய நிலையில் பல்வேறு ஊா்களுக்குச் சென்று யாசகம் பெற்று கிடைக்கும் பணத்தை கரோனா நிவாரண நிதியாக முதலமைச்சா் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறாா்.

ஒரு வாரத்தில் சுமாா் ரூ. 10 ஆயிரம் வீதம் முதலமைச்சா் நிவாரண நிதிக்கு வழங்கும் பூல்பாண்டியன் திங்கள்கிழமை சேரன்மகாதேவி இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கிளை மூலம் ரூ. 10 ஆயிரம் அனுப்பியுள்ளாா்.

இதையறிந்த சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் சிவகிருஷ்ணமூா்த்தி, பூல்பாண்டியனை பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

SCROLL FOR NEXT