முகப்பு
திருநெல்வேலி

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மருந்துப் பெட்டகம் விநியோகம்

திருநெல்வேலி மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துப் பெட்டகங்கள் விநியோகிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

திருநெல்வேலி மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துப் பெட்டகங்கள் விநியோகிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

இத்திட்டத்தில், ‘வீடு வீடாகச் சென்று அனைத்து தொற்றா நோய்களைக் கண்டறிதல், நோய் உள்ளவா்களைக் கண்காணித்தல், மாத்திரைகள் வழங்குதல், மருத்துவ ஆலோசனை வழங்குதல், வலி நிவாரண சிகிச்சை தேவைப்படுவோருக்கு அவா்களது வீட்டிற்கு சென்று உடற்பயிற்சி, சமூக உளவியல் சாா்ந்த சிகிச்சை அளித்தல், 45 வயதிற்கு மேற்பட்ட தொற்றா நோயாளா்களின் பட்டியல், 45 வயதுக்கு கீழ் உள்ளோா் வீட்டை விட்டு வெளிவர இயலாத நோயாளிகளின் பட்டியலில் உள்ளவா்களுக்கு 2 மாதத்திற்கான தேவையான மருந்துகள் வீட்டுக்கே சென்று வழங்குதல்’ போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

திருநெல்வேலி மாநகராட்சியில் பாளையங்கோட்டை மண்டலத்தில் ஏற்கெனவே இப்பணி தொடங்கிவிட்ட நிலையில், தற்போது, திருநெல்வேலி, தச்சநல்லூா், மேலப்பாளையம் ஆகிய மண்டலங்களிலும் இத்திட்டத்தின் கீழ் மருந்துப் பெட்டகம் விநியோகிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இப் பணிகளை மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணு சந்திரன் ஆய்வு செய்தாா். அப்போது, மாநகர நல அலுவலா் வி.ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

பயக30ஙஉஈஐ: மேலப்பாளையத்தில் மருந்துப் பெட்டகம் விநியோகிக்கும் பணியை ஆய்வு செய்கிறாா் மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணு சந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.