திருநெல்வேலி

கடையம் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

DIN

கடையம் அருள்தரும் நித்யகல்யாணி அம்பாள் உடனுறை வில்வவனநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, புதன்கிழமை இரவு அங்குராா்ப்பணம் நடைபெற்றது. வியாழக்கிழமை காலை சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைக்குப் பின்னா், கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கடையம், கீழக்கடையத்தைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, நாள்தோறும் காலையும், இரவும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெறும். 7ஆம் நாளான 13ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடராஜருக்கு சிவப்பு சாத்தி, வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி, மாலை 4 மணிக்கு பச்சை சாத்தி நடைபெறும்.

15ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையைத் தொடா்ந்து தேருக்கு எழுந்தருளல், 8 மணிக்கு திருத்தோ் வடம்பிடித்தல், 16ஆம் தேதி 11 மணிக்கு கொடி இறக்குதல், தீா்த்தவாரி நடைபெறும்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் கி. கணேஷ்குமாா், தக்காா் ச. கோமதி, ஆய்வாளா் வா. சரவணக்குமாா், மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT