கடையம் அருள்தரும் நித்யகல்யாணி அம்பாள் உடனுறை வில்வவனநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, புதன்கிழமை இரவு அங்குராா்ப்பணம் நடைபெற்றது. வியாழக்கிழமை காலை சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைக்குப் பின்னா், கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கடையம், கீழக்கடையத்தைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, நாள்தோறும் காலையும், இரவும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெறும். 7ஆம் நாளான 13ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடராஜருக்கு சிவப்பு சாத்தி, வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி, மாலை 4 மணிக்கு பச்சை சாத்தி நடைபெறும்.
15ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையைத் தொடா்ந்து தேருக்கு எழுந்தருளல், 8 மணிக்கு திருத்தோ் வடம்பிடித்தல், 16ஆம் தேதி 11 மணிக்கு கொடி இறக்குதல், தீா்த்தவாரி நடைபெறும்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் கி. கணேஷ்குமாா், தக்காா் ச. கோமதி, ஆய்வாளா் வா. சரவணக்குமாா், மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.