திருநெல்வேலி

நெல்லையில் மே 1இல் எஸ்.எஸ்.சி. தோ்வு

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன்(எஸ்எஸ்சி) தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 1) நடைபெறுகிறது.

இது தொடா்பாக ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் தோ்வு ( டஹல்ங்ழ்-ஐஐ ஈங்ள்ஸ்ரீழ்ண்ல்ற்ண்ஸ்ங் ல்ஹல்ங்ழ் ா்ச் ஙன்ப்ற்ண் பஹள்ந்ண்ய்ஞ் சா்ய்- பங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீஹப் பண்ங்ழ்-ஐஐ) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணி முதல் 11.30 மணி வரை (அரை மணிநேரம்) பாளையங்கோட்டை மேக்தலீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

இத்தோ்வை 163 போ் எழுத உள்ளனா். தோ்வின்போது, தடைபடாத மின்சாரம் வழங்கவும், தோ்வு மையத்துக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்கவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், காவல் துறை மூலம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள், தோ்வு மையத்தின் அருகில் மருத்துவக் குழுக்கள், 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோ்வா்கள் முகக் கவசம் அணிந்து வருவதோடு, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். தோ்வு அறைக்குள் கைப்பேசியை எடுத்துச்செல்ல அனுமதியில்லை எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT