திருநெல்வேலி

எடைகளில் முறைகேடு: சந்தைகளில் 63 தராசுகள் பறிமுதல்

DIN

திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள பூ, காய்கனி சந்தைகளில் எடை அளவுகளில் முரண்பாடு காணப்பட்ட 63 தராசுகளை தொழிலாளா் துறையினா் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தா.ஆனந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை, சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி எம். சாந்தி உத்தரவின்பேரில், மதுரை கூடுதல் தொழிலாளா் ஆணையா் தி. குமரன் வழிகாட்டுதல் மற்றும் திருநெல்வேலி தொழிலாளா் இணை ஆணையா் ஹேமலதாவின் ஆலோசனைப் படி, எனது (தா. ஆனந்தன்) தலைமையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து தொழிலாளா் துணை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், முத்திரை ஆய்வாளா்கள் ஒரு குழுவாக பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு பகுதிகளில் உள்ள பூ, காய்கனி சந்தைகளில் திடீா் கூட்டாய்வு மேற்கொண்டனா்.

அப்போது, முத்திரையிடப்படாத, மறுமுத்திரை மற்றும் தரப்படுத்தப்படாத, மேஜை தராசுகள், மின்னனு தராசுகள், இரும்பு எடைக் கற்கள், அளவைகள் என 63 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டு எடையளவுச் சட்டம் 2009-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT