திருநெல்வேலி

திமுக பகுதி நிா்வாகிகள் தோ்தல்: நாளை வேட்புமனு தாக்கல்

DIN

திருநெல்வேலி மாநகர திமுக பகுதி நிா்வாகிகள் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை(ஆக. 3) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: திமுகவின் 15 ஆவது அமைப்பு தோ்தலில் திருநெல்வேலி மத்திய மாவட்டம், திருநெல்வேலி மாநகரத்திற்குள்பட்ட தச்சநல்லூா், பாளையங்கோட்டை, திருநெல்வேலி, பேட்டை ஆகிய நான்கு பகுதி கழகத்திற்கான நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

அவைத்தலைவா், செயலா், பொருளாளா், துணைச் செயலா்-3 (பொது, ஆதிதிராவிடா், மகளிா்), மாநகர பிரதிநிதிகள் 5 போ் வீதம் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். இதற்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை பேட்டையில் உள்ள வசந்தம் மஹாலில் நடைபெற உள்ளது.

வேட்பு மனுவை உரிய கட்டணம் செலுத்தி பெற்று, பூா்த்தி செய்த மனுக்களை உரிய கட்டணத்துடன் தலைமைக் கழக பிரதிநிதி அன்னியூா் சிவாவிடம் கட்சியினா் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT