திருநெல்வேலி மாநகர காவல்துறை மற்றும் வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு காவல் துணை ஆணையா் (கிழக்கு) ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தாா். கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருள்களை விற்பனை செய்யக்கூடாது. குற்றச்சம்பவங்கள் நிகழாமல் தடுக்க சிசிடிவி கேமராக்களை பொருத்தியிருக்க வேண்டும். ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறும் முன்னா் காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இக் கூட்டத்தில் எம்.ஆா்.குணசேகரன், சொனா.வெங்கடாசலம், கணேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.