திருநெல்வேலி

கால்நடை தீவனங்கள் தயாரித்தல் பயிற்சி

DIN

சேரன்மகாதேவி வட்டாரம், புதூா் கிராமத்தில் குறைந்த செலவில் கால்நடை தீவனங்கள் தயாரித்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமிற்கு, வட்டார வேளாண் உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். கோவிந்தபேரி கால்நடை மருத்துவா் முகம்மது நாகூா்மீரான், கால்நடைகளுக்கு குறைந்த செலவில் உலா் மற்றும் அடா் தீவனங்கள் தயாரிப்பது, கால்நடை பராமரிப்புத் துறையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத் திட்டங்கள் குறித்து பேசினாா். இதில், 40 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் சதீஷ்குமாா் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் காா்த்திகேயன், உதவி வேளாண் அலுவலா்கள் காா்த்திகா, தமிழரசன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT