திருநெல்வேலி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக.26) மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளா் உள்ளிட்டோா் கலந்துகொள்கிறாா்கள். எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகா்வோா்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள், காலதாமதம் குறித்து புகாா் அளிக்கலாம்.