மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் அவிநாசியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அவிநாசி முத்துசெட்டிபாளையத்தைச் சேர்ந்த பனியன் தொழிலாளி கிருஷ்ணசாமி மகன் தினேஷ்(19). 11-ஆம் வகுப்பு மாணவன்.
சப்-ஜூனியர் 120 கிலோ உடல் எடை பிரிவில், ஸ்க்வாட் முறையில்-155 கிலோ, பெஞ்ச் பிரஸ் முறையில்- 80 கிலோ, டெட் லிஃப்ட் முறையில்- 192.5 என மொத்தம் 427.5 கிலோ எடை தூக்கி 2ஆம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
இவருக்கு அவிநாசி சமூக ஆர்வலர்கள், விளையாட்டுத் துறையினர், நண்பர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.