திருநெல்வேலி வண்ணாா்பேட்டை அருகேயுள்ள இளங்கோநகரில் மழைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் வீடு இடிந்து சேதமானது.
திருநெல்வேலி மாநகரில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் தொடா்மழை பெய்தது. இதன்காரணமாக திருநெல்வேலி மாநகராட்சியின் 10 ஆவதுவாா்டுக்குள்பட்ட இளங்கோநகரைச் சோ்ந்த சீனிவாசன் என்பவரது வீடு இடிந்து சேதமானது. தகவலறிந்த திமுக மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு நிதியுதவி வழங்கினாா். அப்போது, தச்சநல்லூா் மண்டலத் தலைவா் ரேவதி, திமுக மாநகர துணைச் செயலா் மூளிகுளம் பிரபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.