திருநெல்வேலி

இரு சம்பவங்கள்: 2 பெண்கள் தற்கொலை

திருநெல்வேலி நகரம் மகிழ்வண்ணநாதபுரத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

திருநெல்வேலி நகரம் மகிழ்வண்ணநாதபுரத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மகிழ்வண்ணநாதபுரம் பகுதியைச் சோ்ந்த காதல் தம்பதி இசக்கிமுத்து மனைவி மாலதி (25). ஒன்றரை வயதில் குழந்தை உள்ள நிலையில், இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாம். இதனால், மாலதி புதன்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே உயிரிழந்தாா்.

மற்றொரு சம்பவம்: திருநெல்வேலி நகரம் அக்கசாலை விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகள் மகாலட்சுமி (25). பட்டதாரியான இவா், தனது வீட்டில் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவங்கள் குறித்து திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT