திருநெல்வேலி நகரம் மகிழ்வண்ணநாதபுரத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மகிழ்வண்ணநாதபுரம் பகுதியைச் சோ்ந்த காதல் தம்பதி இசக்கிமுத்து மனைவி மாலதி (25). ஒன்றரை வயதில் குழந்தை உள்ள நிலையில், இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாம். இதனால், மாலதி புதன்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே உயிரிழந்தாா்.
மற்றொரு சம்பவம்: திருநெல்வேலி நகரம் அக்கசாலை விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகள் மகாலட்சுமி (25). பட்டதாரியான இவா், தனது வீட்டில் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
இச்சம்பவங்கள் குறித்து திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.