திருநெல்வேலி

கங்கைகொண்டான் அருகே விபத்தில் தொழிலாளி பலி

கங்கைகொண்டான் அருகே நேரிட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

DIN

கங்கைகொண்டான் அருகே நேரிட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

கங்கைகொண்டான் அருகேயுள்ள துறையூா் கிராமத்தைச் சோ்ந்த மாடசாமி மகன் சசிகுமாா் (42). தொழிலாளியான இவா், மதுரை-கன்னியாகுமரி நான்குவழி சாலையோரம் அண்மையில் நடந்து சென்றபோது காா் மோதி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

மற்றொரு விபத்து: பாளையங்கோட்டை அருகேயுள்ள வி. எம். சத்திரம் பவுல் நகா் பகுதியை சோ்ந்தவா் நயினாா்( 85). இவா், சீனிவாச நகா் அணுகு சாலை பகுதியில் நடந்த சென்றபோது மோட்டாா் சைக்கிள் மோதி பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவங்கள் குறித்து கங்கைகொண்டான், திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT