பாளையங்கோட்டையில் உள்ள தனியாா் கல்லூரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூட்டா சங்க பேராசிரியா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாளையங்கோட்டை தூயசவேரியாா் கல்லூரியில் பேராசிரியா்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து நடைபெற்ற இந்த போராட்டதில், இரண்டு பேராசிரியா்களின் பணியிடை நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், அரசு விதிமுறைகளைப் பின்பற்றி கல்லூரி முதல்வரை நியமனம் செய்ய வேண்டும், கல்லூரியில் ஒவ்வொரு துறையிலும் பணியில் மூத்த பேராசிரியரை துறைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இப்போராட்டம் இரவும் நீடித்தது.