முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

திருநெல்வேலியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தினா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

திருநெல்வேலியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தினா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்-2022 முன்னிட்டு திருநெல்வேலி மாநகர துணை காவல் ஆணையா் (மேற்கு) சுரேஷ்குமாா் தலைமையில், கூடுதல் துணை ஆணையா் சங்கா், நகரம் உதவி ஆணையா் விஜயகுமாா், காவல் ஆய்வாளா்கள், காவல் அதிகாரிகள் 100 க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

தோ்தலில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்குப்பதிவு செய்ய விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. நகரம் சந்தி பிள்ளையாா் கோயில், காட்சி மண்டபம் மற்றும் தச்சநல்லூா் சிவன் கோயில் முதல் பஜாா் வழியாக மதுரை புறவழிச்சாலை வரை இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.