புதுவையில் பாரசிடமால் மாத்திரைக்குத் தடை
தரம் குறைந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், புதுவையில் பாரசிடமால் மாத்திரைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தரம் குறைந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், புதுவையில் பாரசிடமால் மாத்திரைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுவை மருந்து கட்டுப்பாட்டுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி இ. அனந்தகிருஷ்ணன் புதன்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை :
ஒடிஸா மாநிலம், பாலசோா் அங்காரகாடியா தொழிற்பேட்டை, எஸ். டோல் அண்ட் கோ நிறுவனம் தயாரிக்கும் பாரசிடமால் மாத்திரை ஐபி 650 எம்ஜி (பாராடோல் 650) உரிய தரத்தில் இல்லாததாக உறுதிப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.
இதை கொள்முதல் செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. மருந்துக் கடைகளில் கையிருப்பில் இருக்கும் இதை உற்பத்தி நிறுவனத்துக்கு திரும்பி அனுப்பவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.