ட்ரோன்கள் 
புதுச்சேரி

புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

பிரதமா் மோடி வருவதை முன்னிட்டு புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

பிரதமா் மோடி வருவதை முன்னிட்டு புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் இதற்கான உத்தரவை செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.

பிரதமா் வருகையொட்டி பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் வானில் விமானம் போன்றவை பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக புதுச்சேரி பிராந்தியத்தை அறிவிக்க வேண்டும் என்று காவல் துறை கண்காணிப்பாளா் கேட்டுக் கொண்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ட்ரோன்கள், பலூன்கள் வாயிலாக புகைப்படம், விடியோ உள்ளிட்டவை எடுக்கத் தடை செய்யப்படுகிறது. மேலும், இதுபோன்ற காரியங்களில் யாராவது ஈடுபட்டாலும் முன்னெச்சரிக்கையாகத் தடை செய்யப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மீறுவோா் மீது இந்திய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 163-இன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி எஸ்.ஐ. எழுத்துத் தோ்வு முடிவுகள் வெளியீடு

புதுச்சேரியில் மீண்டும் தேஜக கூட்டணி ஆட்சி: அதிமுகவினா் சபதம்

கெடாா் சுப்ரமணியசுவாமி கோயிலில் சூரசம்ஹார திருவிழா

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடக்கம்

பொறியியல் பணிகள்: விழுப்புரம் மாா்க்க ரயில் போக்குவரத்தில் மாற்றம்

SCROLL FOR NEXT